சோழர்கள் காடு- காவிரி

 சோழர்கள் காடு

........................................
குடகு இன மக்களின் விடுதலையே காவிரியை விடுவிக்கும்...
தமிழர்கள் தென்னிந்திய அரசியலில் நுழைய வேண்டும்
.- மன்னர் மன்னன்
...................................................
.
காஷ்மீருக்காக போராடும்
திராவிடர்கள் எப்போது தமிழர்களுக்காக போராடுவீர்கள் !!
.
"கன்னடர்களின் தாயகத்தில்
காவிரி ஆறு உற்பத்தி ஆகிறதா..??"
இல்லை.
.
"காவிரி ஆறு கன்னடர்களின் தாயகத்தில் உற்பத்தி ஆவதாக
ஒரு தவறான கருத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
.
#காவிரி வரும் வழியில் பயன்படுத்திக் கொள்பவர்கள்தாம்
கன்னடர்களும்!
.
#குடகு இன மக்களின் தாயகத்தில்தான்
காவிரி உற்பத்தியாகிறது.
.
#கர்நாடகத்தில் குடகு ஒரு மாவட்டமாக உள்ளது.
.
அவர்கள் மொழி குடகு.
அவர்கள் தனித் தேசிய இனம்.
அவர்கள் கன்னட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
.
#குடகு இன மக்கள் #தனியரசு நடத்தி வந்தவர்கள்.
குடகு மொழி #தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
.
1956 மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது
குடகு மக்கள், தங்களுக்குத் #தனிமாநிலம் கேட்டுப் போராடினார்கள்.
.
அம்மக்களின் தலைவர்கள் அப்போது தில்லி சென்று
இந்தியத் தலைமையமைச்சர் நேருவிடம் விண்ணப்பம் கொடுத்துத்
தனி மாநிலம் கோரினார்கள்.
.
தங்களைக் கன்னடர்களுடன் இணைத்து
#மைசூர் மாநிலத்தில் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
.
இப்பொழுதும் வழக்குரைஞர் #நாச்சப்பா தலைமையில்
#குடகு இன மக்கள் மொழி அடிப்படையில்
தங்களுக்கு தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள்.
குடகு மக்கள் தாயகம்
இப்பொழுது கர்நாடகத்தில்
ஒரு மாவட்டமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
.
மைசூருக்கு மேற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில்
பசுமை மிக்க மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் உட்கார்ந்திருக்கிறது
.
#குடகு மாவட்டம்.
.
குடகு மாவட்டத்தின் தலைநகரம் மடிக்கரை.
கன்னடர்கள் இத்தமிழ்ச் சொல்லை "மடிக்கெர" என்று சொல்கிறார்கள்.
ஆங்கிலேயன் இதை "மெர்க்காரா" என்று உச்சரித்தான்.
.
மடிக்கரையிலிருந்து 34 கி.மீ. மலைமீது ஏறினால்
தலைக்காவேரி,
"தலக் காவேரி" என்று கன்னடத்திலும்,
குடகிலும் சொல்கிறார்கள்.
.
அந்தத் தலைக் காவிரியின் முகப்பில்
பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள்.
.
மேற்கு தொடர்ச்சி மலையின்
இப்பகுதிக்கு "சோழர்கள் காடு" என்று பெயர்.
.
சோழர்கள் காட்டில் உள்ள
பிரம்மகிரி மலையில்
#தலைக்காவிரி உற்பத்தியாகிறது என்பதே
அந்த பெயர்ப்பலகையில் உள்ள செய்தி.
.
#சோழப்பேரரசின் கீழ் இருந்ததுதான் அப்பகுதி!
.
சோழர்கள் காட்டில் தலைக்காவிரி உற்பத்தியாகி
இரண்டு சிற்றாறுகளாக ஓடிவந்து
கீழே உள்ள பாக மண்டலா என்ற இடத்தில் இணைந்து
காவிரி ஒரு ஆற்றின் உருவம் பெறுகிறது.
.
அங்கிருந்து ஓடி குசால் நகரைக் கடக்கும்போது,
முழு ஆறாகி விடுகிறது.
.
அதன் பிறகு,
குசால் நகருக்கு வடமேற்கே ஓடிவரும்
ஏரங்கி காவிரியில் கலக்கிறது.
ஆரங்கியும் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
.
#கபிலா ஆறு
கேரளத்தில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கிறது.
கபிலாவை மறித்து
கன்னடர்கள் கட்டிய அணைதான்
.
கன்னடர் பகுதியிலும்
சில துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன.
ஆனால் பெரும்பகுதி நீர் குடகிலும்,
கேரளத்திலும் உற்பத்தியாகி ஓடி வருகிறது
என்பதே உண்மை.
.
#வேற்று தேசிய இனமக்களின் தாயகத்தில் உற்பத்தியாகிப்
பெருகி ஓடிவரும் காவிரியைக்
#கன்னடர்கள் வழிமறித்துத் தடுத்து வைத்துக் கொண்டு,
.
தங்கள் தாயக மண்ணில்
உற்பத்தியான நீர் என்று
போலி வாதம் பேசுகின்றனர்.
.
காவிரி நீரைத் தங்களுக்குப் பயன்படும்படி
கர்நாடகம் திட்டங்கள் தீட்டவில்லை என்பதே
#குடகுஇன மக்களின் குறைபாடு.
.
காவிரிச் சிக்கல் எழும்போதெல்லாம்
குடகு மக்கள் தமிழகத்திற்காகவே குரல் கொடுக்கின்றனர்.
.
கன்னடர்கள் தங்களையும் ஏமாற்றுகிறார்கள்;
தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள்
என்பதே குடகு இன மக்களின் குற்றச்சாட்டு.
.
#மொழி அடிப்படையில்
குடகுத் தனி மாநிலம் அமையத்
#தமிழ்நாடு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.
.
காவிரிப் போராட்டத்தின் வியூகமாக
இதைக் குறுக்கிப் பார்க்காமல்
ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்ய வேண்டிய
சகோதர உதவி என்று கருத வேண்டும்".
.
- ஐயா பெ.மணியரசன் அவர்கள், தலைவர்,
("காவிரி - நேற்று, இன்று, நாளை" நூலில்).

Comments

Popular posts from this blog

உழவுக்கும் உண்டு வரலாறு

தமிழ் எண்ணும் எழுத்தும்